Tuesday, 27 July 2010

குற்றம்

பெண்ணே,

உன் பார்வையில்

என் மரணத்தை முத்தமிட்டேன்

யார் மீது குற்றம்..???

பார்வை அற்றவன்

பார்த்து பார்த்து

பழக ஆசை

ஆனால்

பார்வை இல்லை..!!

வரம்

பெண்ணே,

வரம் தருவாயா

உன் மூச்சு காற்றில்

நான் உயிர் வாழ..!!

அமுதம்

அமுதம் கண்டேன், பருகினேன்

என்னவளின் வியர்வையில்..!!

காதல்

அன்று

படிச்சி படிச்சி

சொன்னார்கள்

ஆனால் இன்று

மிஞ்சியதோ

குவாட்டரும், தாடியும் தான்

வித்தியாசம்

பெண்ணே,

உனக்கும் எனக்கும் ஓர் வித்தியாசம் தான்

நான் நினைவுகளோடு மட்டும் வாழ்கிறேன்

நீயோ நிஜங்களோடு வாழ்கிறாய்

இது நியாமா..???

மாமனார்

வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு மருமகள்

வருவாளா என்று ஏங்கினேன்

வந்தாள், ஏற்றினாள்

ஏற்றிய கையோடு காட்டினாள்

முதியோர் இல்லம்..