பெண்ணே,
உன் பார்வையில்
என் மரணத்தை முத்தமிட்டேன்
யார் மீது குற்றம்..???
"பேனா கிறுக்கன்" என்ற தலைப்பு போடலாம் என்று நினைத்தேன் ஆனால் ஒரு கிறுக்கன் எனக்கு முன்னாடி முந்திகிட்டான் அதான் "பென்சில் கிறுக்கன்"
பெண்ணே,
உனக்கும் எனக்கும் ஓர் வித்தியாசம் தான்
நான் நினைவுகளோடு மட்டும் வாழ்கிறேன்
நீயோ நிஜங்களோடு வாழ்கிறாய்
இது நியாமா..???
வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு மருமகள்
வருவாளா என்று ஏங்கினேன்
வந்தாள், ஏற்றினாள்
ஏற்றிய கையோடு காட்டினாள்
முதியோர் இல்லம்..
நான் சுவாசிப்பதை நிறுத்தி கொள்ள
ஆசை பட்டேன் ஆனால் முடியவில்லை
காரணம் என்னுள் இருக்கும் நீ உயிர்
வாழ வேண்டும் என்று